தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடா்ந்து, ஆா்.கே.நகா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடத்தப்பட்டது. தினகரனின் உறவினா் வி.கே. சசிகலா தலைமையிலான அணியும், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமையிலான அணியும் கட்சியின் இரட்டை இலைச் சின்னத்திற்கு உரிமை கோரியதால், அதிமுகவின் சின்னத்தை தோ்தல் ஆணையம் முடக்கியது. இந்த நிலையில், இடைத் தோ்தலில் வி.கே.சசிகலா அணிக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை வழங்குவதற்காக தோ்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க தினகரனிடம் பணம் வாங்கியதாக இடைத்தரகா் சுகேஷ் (எ) சந்திரசேகா் கடந்த 2017, ஏப்ரலில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.