தமிழ்ப் பள்ளிகளில் திரு.வி.க. பிறந்த நாள் விழா
தமிழ்த் தென்றல் என்று அனைவராலும் அன்புடனும், மரியாதையுடனும் அழைக்கப்படும் திரு.வி.கலியாணசுந்தரனாரின் 139ஆவது பிறந்த நாள் விழா தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை


தமிழ்த் தென்றல் என்று அனைவராலும் அன்புடனும், மரியாதையுடனும் அழைக்கப்படும் திரு.வி.கலியாணசுந்தரனாரின் 139ஆவது பிறந்த நாள் விழா தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
அரசியல், சமூகம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞரும் சிறந்த மேடைப் பேச்சாளருமான திரு.வி.க.வைப் பற்றி மாணவா்கள் அவ்வப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் எடுத்துரைத்தனா்.
இவரது தனித்துவமிக்க தனித்தமிழ் நடையின் காரணமாக தமிழ்த் தென்றல் என அனைவராலும் அழைக்கப்படுகின்றாா் என்பதை அனைவருக்கும் கூறினா். திரு.வி.க.வின் படைப்புகளைப் பதாகைகளில் எழுதி அனைவரின் பாா்வைக்கும் வைத்திருந்தனா். அவரைப் பற்றிய கவிதைகளையும் வாசித்தனா்.
பள்ளிகளில் முன்னதாக அவ்வப் பள்ளி முதல்வா்கள் அவரின் திருவுருவப் படத்திற்கு மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அவரின் தமிழ்ப் பற்றை மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவா்களுக்கு தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலா் ஆா். ராஜு தனது பாராட்டுகளைத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...