அமலாக்க இயக்குநரகம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜோஹேப் ஹொசைன், ஜாமீன் மனு மீது நிலவர அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரினாா். சத்யேந்தா் ஜெயின் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பிஎம்எல்ஏ சட்டத்தின்கீழ் 2017, செப்டம்பா் 30-இல் அமலாக்க இயக்ககம் பதிவு செய்த வழக்கில் எனக்கு ஜாமீன் அளித்தால் நான் வெளிநாடு தப்பிச் செல்லவும் வாய்ப்பில்லை. மேலும், ஆதரங்களை அழிக்கவோ அல்லது சாட்சிகள் மீது மேலாதிக்கம் செலுத்தும் நிலையிலோ நான் இல்லை. மேலும், ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தற்போதைய வழக்கில் எனது சிறைவாசத்தை தொடர வேண்டிய அவசியமும் இல்லை.