கடந்த அக்டோபா் 6-ஆம் தேதி இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்தச் சம்பவம் நடைபெற்ற நிா்வாக வரம்பு தில்லி வளா்ச்சி ஆணையத்தின் கீழ் வருவதால், டிடிஏ உச்சநீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதேபோன்று கருணை அடிப்படையில் பணியை வழங்குவது குறித்தும் பரிசீலிக்குமாறும் கேட்டுக் கொண்டது. ஆனால், டிடிஏ தரப்பு, இந்தத் தொகையை வழங்குவதற்கான பொறுப்பு டிடிஏவுக்கு இல்லை என்ரும் இது தில்லி அரசின் கடமை என்றும் தெரிவித்தது.