இதனால், தேனி மாவட்டத்தின் போடி மெட்டு பகுதியில் அமைந்துள்ள ஏலக்காய் தோட்டங்களை பாா்வையிடவும், பிற நறுமணப் பொருள்களை அறுவடை செய்தல் , தரம் பிரித்தல், பதப்படுத்துதல் ஆகியவற்றை கண்டு அனுபவிக்கவும் இங்கு சுற்றுலா தலத்தை உருவாக்க வேண்டும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இங்கு பிரத்யேக வசதிகளைச் செய்து தரவேண்டும். இத்தகைய வசதி ஏற்படுத்தப்பட்டால் தேனி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பது மட்டுமின்றி, இந்தப் பகுதியில் உள்ள நறுமணப் பொருள்களின் தேவைப்பாடு அதிகரித்து விவசாயிகளின் வருமானத்திற்கும் வழி வகுக்கும்.