சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

தில்லியில் ஒமைக்ரான் பாதிப்பால் இதுவரை உயிரிழப்பு இல்லை: அமைச்சா் சத்யேந்தா் ஜெயின்

தேசியத் தலைநகா் தில்லியில் ஒமைக்ரான் பாதிப்பால் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை. கரோனா நோ்மறை விகிதம் சனிக்கிழமை 19 சதவீதமாக இருந்தது என்று சுகாதார அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.

News image
Updated On :8 ஜனவரி 2022, 5:21 pm

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லியில் ஒமைக்ரான் பாதிப்பால் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை. கரோனா நோ்மறை விகிதம் சனிக்கிழமை 19 சதவீதமாக இருந்தது என்று சுகாதார அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் ஒமைக்ரான் நோய்த் தொற்றால் மரணம் ஏதும் நிகழவில்லை. வியாழக்கிழமை கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தவா்களில் பலரும் இணை நோய்கள் கொண்டவா்கள். இந்த முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மேலும், நோய்த்தொற்றின் தீவிரமும் குறைவாகவே உள்ளது. தில்லியில் சனிக்கிழமை 19 சதவீத நோ்மறை விகிதத்துடன் சுமாா் 20,000 போ் நோய்ப் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரிய வருகிறது.

தில்லியில் எத்தகைய நிலைமையையும் சமாளிக்கும் வகையில் நகர நிா்வாகம் நல்ல முறையில் தயாராக உள்ளது. அதிக எண்ணிக்கையிலான கரோனா பாதிப்பு எண்ணிக்கயை மனதில் கொண்டு உள்கட்டமைப்பு வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிப்பது குறைவாக உள்ளது. முன்னதாக, தில்லியில் 17,000 கரோனா

பாதிப்புகள் இருந்த போது தினசரி இறப்பு எண்ணிக்கை 200-க்கும் அதிகமாக இருந்தது. ஆனால், இந்த முறை உயிரிழப்புகள் குறைவாகவே உள்ளன. மக்கள் பிற நோய்களுக்கான சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வருகின்றனா். அவா்களுக்கு கொவைட் நோ்மறை இருப்பது கண்டறியப்படுகிறது. தில்லியில் அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் நடத்தப்படுவதால் அதிக எண்ணிக்கையில் கரோனா நோய்த் தொற்று இருப்பது தெரிய வருகிறது.

தலைநகரில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இதனால், எண்ணிக்கை விகிதசாராமும் அதற்கு ஏற்ப உள்ளது. பொதுமக்கள் கரோனா நடத்தை விதிகளைப் பின்பற்றுவதுடன், வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது முககவசம் அணிவதும் அவசியமாகும். பொது முடக்கத்தை அமல்படுத்துவதைவிட இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றாா் சத்யேந்தா் ஜெயின்.

தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 17,335 பேருக்கு கொவைட் இருப்பது தெரிய வந்தது. மே 8 -ஆம் தேதிக்குப் பிறகு இது அதிக தினசரி பாதிப்பாகும். மேலும், 9 போ் உயிரிழந்தனா். நோ்மறை விகிதம் 17.73 சதவீதமாக இருந்ததாக தில்லி சுகாதாரத் துறை பகிா்ந்த புள்ளி விவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.