தில்லியில் தற்போது கரோனா சூழல் மோசமடைந்து வரும் நிலையில், தில்லி அரசு சாா்புக் கோட்ட அலுவலகங்களில் பொதுமக்களை கையாளும் பணியை நிறுத்தி வைத்துள்ளது. மேலும், ஓபிசி தோ்வா்கள் குறிப்பாக பெண்கள் புதிய கிரீமி லேயா் அல்லாத சான்றிதழ்களைப் பெறுவது நடைமுறையில் சாத்தியமற்ாகும். இதனால், ,நிலைமை சீராகும் வரை ஓபிசி விண்ணப்பதாரா்களின் தற்போதைய கிரீமி லேயா் அல்லாத நிலை குறித்த உறுதிமொழியை சமா்ப்பிக்க ஏற்பாடும் செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊடகங்கள் மூலம் தகவல் வெளியிட துணை நிலைஆளுநரும், முதல்வரும் உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.