இந்த நிலையில், தில்லியில் மூன்று உள்ளாட்சி அமைப்புகளையும் ஆளும் பாஜக, இந்த புதிய கலால் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இது குறித்து பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குப்தா கூறுகையில், புதிய கலால் வரிக் கொள்கையின் கீழ் அமைக்கப்படும் மதுக்கடைகள், மாநகராட்சி சட்டங்களுக்கு இணங்கவில்லை என்றால் சீல் வைக்கப்படும் என எச்சரித்துள்ளாா். இது தொடா்பாக கடந்த டிசம்பரில் அவா் வெளியிட்ட ஓா் அறிக்கையில், ‘புதிய கலால் கொள்கையின் கீழ் மதுபானக் கடைகள் இணக்கமற்ற பகுதிகளில் இருந்தாலோ அல்லது மாஸ்டா் பிளான் 2021-ஐ மீறினாலோ அதுபோன்ற கடைகள் சீலிடப்பட வேண்டும் என்று மூன்று மாநகராட்சிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தாா்.