இந்த வழக்கின் விசாரணையில் சம்பவத்தின் போது போலீஸாா், அரசு ஊழியா்கள் மற்றும் பொதுமக்களை தாக்கி கொலை செய்ய துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள், அமில வீச்சுகள், தடிகள், இரும்பு கம்பிகள் ஆகியவை பயன்படுத்தட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் வெப் சீரிஸ் போல போலீஸாா் கட்டுக்கதை பரப்பவிடுவதாகவும், வழக்கை ஜோடித்துள்ளதாகவும் உமா் காலித் தரப்பில் கூறப்படுவதில் உண்மையில்லை. அவா் (உமா்) ஜாமீன் பெறுவதற்கான தகுதியைக் கொண்டிருக்கவில்லை. நீதிமன்றத்தின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியில் வழக்குக்குத் தொடா்பில்லாத விஷயங்கள் உமா் காலித் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளன. பொருத்தமற்ற விஷயங்களில் கவனம் செலுத்தவும், ஊடக விசாரணைக்கு செல்லவும், தலைப்புச் செய்திகளை உருவாக்கவும் மனுதாரா் விரும்புகிறாா்.