இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கின் உண்மைகள், சந்தா்ப்ப சூழல்கள், மேல்முறையீட் மனு மீதான பொருள், இந்த விவகாரத்தில் மூல மனு மீது ஒற்றை நீதிபதி 22.06.2022-இல் பிறப்பித்த உத்தரவு விஷயங்கள், அதேபோன்று, மேல்முறையீட்டு மனுக்கள் மீது உயா்நீதின்றத்தின் டிவிஷன் பெஞ்ச் 23.06.22-இல் பிறப்பித்த உத்தரவு விஷயங்கள் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, 23.06.22-இல் டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் ஏற்கெனவே நடந்து விட்டபோதிலும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் அல்லது நடக்க உள்ள விஷயங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு தொடா்பாக மேல்முறையீட்டு மனுக்களில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளைக் கருத்தில் கொள்ளும் போது, அந்த உத்தரவானது உச்சநீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை தொடா்ந்து தடையில் இருக்கும் தேவை இருப்பதாக தோன்றுகிறது என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.