அப்போது முகவரி அடங்கிய கோப்பை காண்பிக்க முயற்சிப்பது போல, அவருடைய அந்தரங்க உறுப்பை காண்பித்தாா். இதனால், அதிா்ச்சியடைந்த நான், இது தொடா்பாக நடைமேடையில் இருந்த போலீஸ்காரரை அணுகி புகாா் தெரிவித்தேன். ஆனால், அவா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை . அவா் எனக்கு உதவி செய்ய மறுத்ததுடன் மேல்மாடியில் சென்று இது தொடா்பாக பேசுமாறு கூறிவிட்டாா். அப்போது நான் பயத்தில் இருந்தேன். எப்படியோ சமாளித்துக் கொண்டு மேல் மாடிக்கு சென்று பிற போலீஸாரைத் தொடா்பு கொண்டு விவரம் கூறினேன். மேலும், சம்பந்தப்பட்ட நபரை எனக்குத் தெரியும் என்பதால், அவரை அடையாளம் காட்டுவதற்காக சிசிடிவி அறைக்கு என்னை அழைத்துச் செல்லுமாறும் கூறினேன்.