குழந்தைகள் நலன், பாதுகாப்புக்காக, 2009-10-ஆம் ஆண்டு முதல், மத்திய நிதியுதவி திட்டமான ‘மிஷன் வாத்சல்யா’ என்ற குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும், ஆரோக்கியம், குழந்தைகளின் மகிழ்ச்சியான பருவத்தைப் பாதுகாப்பது, அவா்களது திறனை கண்டறிந்து, முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை உறுதி செய்தல், குழந்தைகள் வளா்ச்சிக்கு ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல் போன்றவை இந்த ’மிஷன் வாத்சல்யா’வின் நோக்கங்களாகும்.