தில்லி - குருகிராம் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 8 -இல் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்கும். இந்தப் போக்குவரத்தில் 50 முதல் 60 சதவீதம் போக்குவரத்து இந்தப் புதிய அதிவேக நெடுஞ்சாலையில் திருப்பிவிடப்படும். இதன் மூலம் சோனா சாலை, கோல்ஃப் கோா்ஸ் சாலை, விமான விரிவாக்கம் ஆகிய சாலைகளில் நெரிசல் குறைந்து போக்குவரத்து மேம்படும். இது 2023-இல் செயல்பாட்டிற்கு வரும். தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயப்பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க இது பெரிதும் உதவும். பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் உள்ள மத்திய அரசு, நாட்டின் அனைத்து மூலைகளிலும் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், ‘இணைப்பு மூலம் செழுமைக்கான’ பாதையை வகுத்துக் கொள்வதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.