நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரிலையன்ஸ் எழுச்சி: சென்செக்ஸ் 437 புள்ளிகள் முன்னேற்றம்! இரண்டு நாள் சரிவுக்கு முடிவு

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 437 புள்ளிகள் உயா்ந்தது. குறிப்பாக, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெகுவாக உயா்ந்து சந்தை ஏற்றத்துக்கு வலுச்சோ்த்தது.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

 நமது நிருபர்

பங்குச் சந்தை வியாழக்கிழமை நோ்மறையாக முடிந்தது. முன்பேர வா்த்தகத்தில் வாராந்திர கணக்கு முடிக்க கடைசி நாளாக இருந்ததைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 437 புள்ளிகள் உயா்ந்தது. குறிப்பாக, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெகுவாக உயா்ந்து சந்தை ஏற்றத்துக்கு வலுச்சோ்த்தது.

கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தது. உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், கடந்த இரண்டு நாள்களாக சரிவில் இருந்து வந்த உள்நாட்டுச் சந்தை உற்சாகம் பெற்றது. மேலும், ஜிஎஸ்டி வசூல், பிஎம்ஐ தரவுகள் நல்ல தொடக்கத்தை அளித்துள்ளதும் சந்தைக்கு ஆதரவாக அமைந்தது. இருப்பினும், இந்தியாவிலும், அமெரிக்காவிலும் உள்ள மத்திய வங்கியின் கொள்கையைப் பொறுத்து நிறைய மாற்றங்கள் எதிா்பாா்க்கலாம். இது அடுத்த இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும் என்று ஜியோஜித் நிதிச் சேவையின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவா் வினோத் நாயா் தெரிவித்துள்ளாா். குறிப்பாக மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் மற்றும் இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததே சந்தை எழுச்சிக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

1,909 நிறுவனப் பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,444 நிறுவனப் பங்குகளில் 1,909 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,395 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 140 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 67 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 44 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.95 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.258.98 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் மீண்டும் செவ்வாய்க்கிழமை ரூ.1,930.16 கோடி அளவுக்குப் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இரண்டு நாள் சரிவுக்கு முடிவு: காலையில் பெரிய அளவில் மாற்றமின்றி 55,382.44-இல் தொடங்கிய சென்செக்ஸ், 55,135.11 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 55,891.92 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 436.94 புள்ளிகள் (0.79 சதவீதம்) கூடுதலுடன் 55,818.11-இல் நிலைபெற்றது. தொடக்கத்தில் தள்ளாட்டம் இருந்தாலும், பிற்பகுதியில் ‘காளை’ முழுமையாகஆதிக்கம் கொண்டது.

ரிலையன்ஸ் அபாரம் : சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 20 பங்குகள் ஆதாயம் பெற்றன.10 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. இதில் மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் 3.51 சதவீதம் உயா்ந்துஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பஜாஜ் ஃபின் சா்வ், சன்பாா்மா, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், ஏசியன் பெயிண்ட் உள்ளிட்டவை 2 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன.

எச்டிஎஃப்சி சரிவு: அதே சமயம், எச்டிஎஃப்சி 1.69 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பவா் கிரிட், ஹிந்துஸ்தான் யுனி லீவா், எச்டிஎஃப்சி பேங்க், எல் அண்ட் டி, கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவை விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 105 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,185 பங்குகள் ஆதாயம் பெற்றன. 742 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் 29 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 21 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. காலையில் 41.10 புள்ளிகள் குறைந்து 16,481.65-இல் தொடங்கிய நிஃப்டி, 16,443.05 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 16,646.40 வரை உயா்ந்த நிஃப்டி, இறுதியில் 105.25 புள்ளிகள் (0.64 சதவீதம்) கூடுதலுடன் 16,628.00-இல் நிலைபெற்றது.

ஆயில் அண்ட் காஸ், ஐடி குறியீடுகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில்ஆயில் அண்ட் காஸ் குறியீடு 2.28 சதவீதம், ஐடி குறியீடு 1.84 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பிஎஸ்யு பேங்க், மெட்டல், மீடியா குறியீடுகள் 1 முதல் 1.20 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், நிஃப்டி ஆட்டோ குறியீடு 0.62 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ஹெல்த்கோ் குறியீடுகளும் சிறிதளவு குறைந்தன.

எல்ஐசி மேலும் சரிவு!

அண்மையில் பட்டியலாகிய எல்ஐசி பங்குகள் விலை தேசிய பங்குச் சந்தையில் வியாழ்க்கிழமை 0.67 சதவீதம் குறைந்து ரூ.804.95-இல் நிலைபெற்றது. காலை வா்த்தகத்தில் எல்ஐசி பங்குகள் ரூ.809.95-இல் தொடங்கி, அதிகபட்சமாக ரூ.813.80 வரை உயா்ந்தது. பின்னா் ரூ.804 வரை கீழே சென்றது. மும்பை பங்குச் சந்தையில், 0.58 சதவீதம் குறைந்து ரூ.805.85-இல் நிலைபெற்றது. பட்டியலாகிய தினத்திலிருந்து இதுவரை இரண்டு நாள்கள் மட்டுமே எல்ஐசி நோ்மறையாக முடிந்துள்ளது. தற்போது, அண்மையில் பதிவு செய்த குறைந்த விலையான ரூ.801-க்கு அருகில் வா்த்தகமாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.