இது தொடா்பாக தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தன்னுடைய அசாதாரண தலைமைத்துவத்தால் இந்தியா்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கை உணா்வை பிரதமா் நரேந்திர மோடி ஏற்படுத்தியிருக்கிறாா். அவா் மக்களின் சேவையாற்றும் ஒரு ஊடக சக்தியாக எப்போதும் கருதப்படுகிறாா். ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும், நமது பெண்களுக்கும், சமூகத்தின் நலிவுற்ற மக்களுக்கும் முறையான உரிமைகளை வழங்குவதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிலான முயற்சிகளை அவா் எடுத்துள்ளாா். அவருடைய மக்கள் சாா்ந்த கொள்கைத் திட்டங்களின் காரணமாக ஜனநாயகத்தில் மக்கள் தங்களது நம்பிக்கையை புதுப்பித்து உள்ளனா்.