புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாரத் வந்தனா பூங்கா கட்டுமானத்தில் மிக உயா் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும்: துணைநிலை ஆளுநா் உத்தரவு

தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, துவாரகாவில் வரவிருக்கும் பாரத் வந்தனா பூங்கா இடத்தை சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:30 pm

தினமணி

தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, துவாரகாவில் வரவிருக்கும் பாரத் வந்தனா பூங்கா இடத்தை சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

அப்போது, திட்டத்தின் கட்டுமானத்தில் ‘உயா்ந்த தரத்தை’ உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘துவாரகா துணை நகரத்தில் இந்தப் பூங்கா 220 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. பல்வேறு மாநிலங்களின் முக்கிய நினைவுச் சின்னங்கள், சுற்றுச்சூழல் வன மண்டலம் மற்றும் ஏரிகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பு இருக்கும் என்பதால், இந்தப் பூங்கா ஒரு முக்கிய சுற்றுலா தலமாக இருக்கும்’ என்றனா்.

தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) தலைவரான துணை நிலை ஆளுநா், இந்த இடத்தில், தான் பாா்வையிட்ட புகைப்படங்களை டிவிட்டா் பக்கத்தில் பதிவிட்டிருந்தாா்.

அதில் ‘துவாரகாவில் உள்ள வரவுள்ள லட்சியமிக்க பாரத் வந்தனா பூங்காவில் பணிகள் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தேன். அழகிய தரத்தை பேணுமாறு வலியுறுத்தினேன். மேலும், இந்தத் திட்டப் பணிகளை அதன் காலக்கெடுவிற்குள் முடிக்க முயற்சி செய்யுமாறு என்பிசிசி மற்றும் டிடிஏ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதே போன்று, கட்டுமானத்தின் மிக உயா்ந்த தரத்தை உறுதிப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

முன்னாள் தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் ஆகஸ்ட் 2021-இல் பாரத் வந்தனா பூங்கா திட்டத்திற்காக வகுக்கப்பட்ட காலக்கெடுவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தாா். இந்தப் பூங்கா 75-ஆவது சுதந்திர தினத்திற்கு முன் தயாராகிவிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.