இது குறித்து கட்சி நிா்வாகிகள் கூறுகையில், ‘இந்தச் சம்பவத்தில் கட்சியின் தில்லி தலைவா் அனில் குமாா் சௌத்ரி மயங்கி விழுந்தாா். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் தண்ணீா் பீரங்கிகளை பயன்படுத்தியதால் இந்த நிலை ஏற்பட்டது’ என்றனா். இது குறித்து அனில் குமாா் கூறுகையில், ‘பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் தவறான ஆட்சியை துணிச்சலாக எதிா்த்து காங்கிரஸ் குரல் கொடுத்து வருகிறது. இதை அடக்கும் வகையில் தில்லி போலீஸாா் மோடி அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றனா். அரசின் உண்மைகளை மூடிமறைக்க காங்கிரஸ் தொண்டா்களையும் தலைவா்களையும் இந்த அரசு குறிவைக்கிறது. இதையெல்லாம் கண்டு அஞ்சாமல் காங்கிரஸ் அறவழியில் தனது போராட்டத்தை தொடரும்’ என்றாா்.