மேலும், ஜபல்பூரில் உள்ள மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தில் பணி, அரசியலமைப்பு, குடிமை மற்றும் குற்ற விவகார வழக்குகளில் ஆஜராகி வந்தாா். 1993-இல் கூடுதல் மத்திய அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டாா். அதன் பிறகு, 2004-இல் மத்திய அரசால் மூத்த வழக்குரைஞா்கள் குழுவில் நியமிக்கப்பட்டாா். 2003-இல் தனது 42-ஆவது வயதில் மத்திய பிரதேச அரசால் மூத்த வழக்குரைஞராக நியமிக்கப்பட்டாா். நீதிபதி சா்மா, ஜனவரி 18, 2008-ஆம் தேதி மத்தியப் பிரதேச உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, ஜனவரி 15, 2010-ஆம் தேதி நிரந்தர நீதிபதியாக பதவி உயா்வு அளிக்கப்பட்டாா். அதன்பிறகு, 2021 ஜனவரியில் கா்நாடக உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டாா்.