திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மஹாவீரர் ஜெயந்தி விழா : ராணிப்பேட்டையில் பல்லக்கு ஊர்வலம்!

ராணிப்பேட்டை நகரில் மஹாவீரர் ஜெயந்தி விழாவினையொட்டி, மேளதாளங்கள் முழங்க பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது.

News image

ராணிப்பேட்டையில் மஹாவீரர் ஜெயந்தி விழா பல்லக்கு ஊர்வலம்

Updated On :31 மார்ச் 2026, 11:41 am IST

ராணிப்பேட்டை நகரில் மஹாவீரர் ஜெயந்தி விழாவினையொட்டி, மேளதாளங்கள் முழங்க பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது.

மஹாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (மார்ச் 31) ராணிப்பேட்டை பஜார் தெருவில் உள்ள சுமதிநாத் ஜெயின் ஆலயத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு அரிசியைக் கொண்டு வழிபாடு நடத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து, மஹாவீரர் சிலை மற்றும் திருவுருவப் படம் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் திரளான ஜெயின் சமூகத்தினர் பாடல்களைப் பாடிய படி மேளதாளங்கள் முழங்க ராணிப்பேட்டை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

இந்த ஊர்வலத்தில் உயிர்களை கொல்லக் கூடாது, மது அருந்த கூடாது என மஹாவீரரின் கொள்கைகளையும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Summary

Mahavir Jayanti Celebrations: Palanquin Procession in Ranipet!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.