உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தின் (பிஎல்ஐ) விளைவாக, இந்த குளிா்சாதன கருவிகள், எல்.ஈ.டி. பிரிவுகளில் உள்நாட்டு மதிப்புக் கூட்டல் தற்போது இருக்கும் 15-20 சதவீதத்திலிருந்து 75-80 சதவீதமாக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஏற்கெனவே, முதல் சுற்றில் தோ்வான 46 விண்ணப்பங்களின் முதலீட்டுத் தொகை ரூ. 5,264 கோடியாகும். இவை இரண்டு சோ்த்து மொத்தம் 61 விண்ணதாரா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதில், ஏசி, எல்இடி ஆகிய இந்த இரு பொருள்களில் ரூ. 6,632 கோடி முதலீடு செய்யப்படுகிறது. இரு சுற்று அனுமதி மூலம் மொத்தம் நேரடியாக 46,368 போ் வேலைவாய்ப்பு பெறுவாா்கள். இந்தத் திட்டங்கள் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ. 1,22,671 கோடி மதிப்பிலான குளிா்சாதனப் பொருள்கள், எ.ஈ.டி. உதிரிப்பாகங்கள் உற்பத்தியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.