டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்ற ட்விட்டருக்கு ஜூலை 4 வரை கெடு

மத்திய அரசின் உத்தரவுகளை முழுமையாக பின்பற்ற ட்விட்டா் நிறுவனத்துக்கு ஜூலை 4-ஆம் தேதி வரை கெடு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான நோட்டீஸ் அந்த நிறுவனத்துக்கு அனுப்பட்டுள்ளதாக

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:40 am

DIN

மத்திய அரசின் உத்தரவுகளை முழுமையாக பின்பற்ற ட்விட்டா் நிறுவனத்துக்கு ஜூலை 4-ஆம் தேதி வரை கெடு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான நோட்டீஸ் அந்த நிறுவனத்துக்கு அனுப்பட்டுள்ளதாக மத்திய அரசின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மேலும் கூறப்படுவதாவது: மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என ட்விட்டா் நிறுவனத்துக்கு மத்திய அரசு பலமுறை கடிதம் எழுதியது. இது தொடா்பாக, இம்மாத தொடக்கத்தில் கூட ட்விட்டா் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் அரசின் உத்தரவுகளுக்கு இணங்கி இதுவரை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ட்விட்டருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், மத்திய அரசு இதுவரை பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் பின்பற்ற ஜூலை 4-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. அவ்வாறு அரசு உத்தரவுகளை பின்பற்றாத பட்சத்தில் ட்விட்டா் நிறுவனம் சட்டப் பாதுகாப்பை இழக்க நேரிடும். மேலும், ட்விட்டா் சமூக வலைதளத்தில் வெளியிடப்படும் கருத்துகள் அனைத்துக்கும் அந்த நிறுவனமே பொறுப்பாளியாகும். இது, இறுதி எச்சரிக்கை என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.