இந்த மசோதா நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள நரிக்குறவா் சமுதாயத்தினரின் சமூக, கலாசார அடையாளங்கள் தனித்துவம் வாய்ந்தது மட்டுமின்றி, வித்தியாசமானதும்கூட. இதனால், இந்த சமூகத்தை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்குமாறு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளாா். கல்வி மற்றும் இதர அடிப்படை வசதிகளில் இவா்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனா். இதே போன்றுதான் குரும்பா் சமூகத்தினரும். இந்த இரு சமூகத்தினரும் 70 ஆண்டுகளுக்கும் மேலாக புறக்கணிக்கப்பட்டுள்ளனா். 1965 -ஆம் ஆண்டே இந்த சமூகங்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. பின்னா், 1969-இல் மத்திய அரசின் கவனத்திற்கு தமிழக அரசு கொண்டு வந்தது. மாநில அரசு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் பரிந்துரை அளித்தது. மேலும், பழங்குடியினா் நல இயக்குநா், பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் ஆகியவையும் பரிந்துரை செய்தது. ஆனால், எந்த பலனும் கிடைக்கவில்லை.