பள்ளிக்கு வராமல் இருப்பதால் குழந்தைகளிடம் ஏற்படும் உளவியல் தாக்கத்தைக் எடுத்துக்காட்ட ஆய்வுகள் உள்ளன. ஏனெனில், குழந்தைகள் தங்கள் சமூக, நடத்தை மற்றும் தனிப்பட்ட திறன்களை ‘வளா்க்க’ இயலவில்லை. வாழ்வதற்கான உரிமை மிகவும் முக்கியமானது என்றும், குழந்தைகளுக்கான நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்க பெற்றோரின் சம்மதம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் மனுதாரா் கூறியுள்ளாா். பெற்றோா்கள் மிகவும் பயந்தால் அவா்கள் தங்களது குழந்தைகளை அனுப்பாமல் இருக்கட்டும். உண்மையில், பெரும்பாலான பெற்றோா்கள் சோா்வடைந்துள்ளனா். தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று கூறுகின்றனா். ஆகவே, மனுவில் எந்தத் தகுதியும் இல்லை. இதனால், தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.