இது தொடா்பாக மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் ஜி.கே வாசன் பேசியதாவது: தமிழ்நாட்டில் கும்பகோணம், திருப்புவனம், தஞ்சாவூா், அரியலூா், கோயம்புத்தூா், ஆரணி, காஞ்சிபுரம் உள்ப பல நகரங்களில் பட்டு நெசவு மேற்கொள்ளப்படுகிறது. பட்டுப் புடவைகள், பட்டு வேஷ்டிகள், பட்டுச் சட்டைகள் இங்கு நெய்யப்படுகின்றன. இந்தியாவின் பல மாநிலங்களில், பட்டு நெசவு கைத்தறி நெசவுத் தொழிலாக செயல்படுகிறது. இதில் தமிழகத்தில், நெசவாளா்கள், பட்டு வியாபாரிகள், பட்டு ஜவுளி அங்காடிகள் நடத்துபவா்கள் என பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோா் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனா்.