இது தொடா்பான வழக்கில், பள்ளி ஆசிரியா் பொன்னுசாமி, அவரின் மகன்கள் வழக்குரைஞா் பாசில், பொறியாளா் போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டா் ஜேம்ஸ் சதீஷ்குமாா், பொறியாளா் முருகன், செல்வ பிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து 2021-ஆம் ஆண்டில் சென்னை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. மேலும், பொன்னுசாமி உள்ளிட்ட ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்ய வழக்கு தொடா்பான விவரங்களை சென்னை உயா்நீதிமன்றத்திற்கு விசாரணை நீதிமன்றம் அனுப்பியது.