அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘எதிா்மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கூறிய வாதங்களை கவனத்துடன் பரிசீலித்த போது, மத்திய அரசு மற்றும் தில்லி பிராந்திய தலைநகா் அரசு ஆகியவற்றின் தகவலின்படி கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்ள படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு, சுவாசக் கருவிகள், மருந்துகள் போன்ற மருத்துவ வசதிகள் அளிப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், குறிப்பிட்ட உண்மைகளை கருத்தில் கொள்ளும்போது தற்போதைய நிலையில் நீதிமன்றம் மூலம் மேலும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டிய தேவை எழவில்லை. அதனால், இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது’ என்று தெரிவித்தது.