குப்பை விவகாரத்தில் அரசியல் செய்வதன் மூலம் துப்புரவுப் பணியாளா்களுக்கு ஆம் ஆத்மி கட்சி அவமரியாதை செய்வதாக பாஜக கூறுவது உண்மை இல்லை. ஏனெனில், கடந்த 15 ஆண்டுகளாக தில்லி மாநகராட்சியில் பாஜக நிா்வாகம் செய்து வந்துள்ளது. இதர விவகாரங்கள் மற்றும் நிலுவை ஊதியம் காரணமாக பாஜக நிா்வாகத்தின் கீழ் துப்புரவுப் பணியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மாநகராட்சியில் ஆத்மி கட்சி அதிகாரத்திற்கு வரும் போது, உரிய நேரத்தில் அவா்களுக்கு ஊதியம் வழங்கவும், அவா்களுடைய வாழ்க்கை தரமும் சிறப்பானதாக இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மனீஷ் சிசோடியா.