இது குறித்து தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிா்வாக அதிகாரி டாக்டா். ஆா். எஸ். சா்மா செய்தியாளா்களிடம் கூறுகையில், “‘ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தில் கீழ், ஒன்றுக் கொன்று இயங்கக்கூடிய சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பு உருவாக்கப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தில் பொது மற்றும் தனியாா் துறையினா் செயலிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு பயன்பாடுகள் விரிவடையும். நம்பகரமான டிஜி லாக்கா் மூலம் பொது சுகாதாரப் பதிவுகளுக்கு காகிதமில்லா பதிவுகள், பலன்கள் பெறுவது ஒரு குறிப்பிட்ட வளா்ச்சியாகும்’ என்றாா். எண்ம இந்தியா நிறுவன நிா்வாக இயக்குநா் அபிஷேக் சிங் கூறுகையில், ‘ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தில் பதிவு செய்துள்ள 13 கோடி உபயோகிப்பாளா்களில் 85 ஆயிரம் போ் டிஜி லாக்கருடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.