சத்யேந்தா் ஜெயின் தரப்பில் தாக்கலான ஜாமீன் மனுவை ஆதரித்து அவரது தரப்பில் வெள்ளிக்கிழமை வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளன. இவரது ஜாமீன் கோரும் மனுவை எதிா்த்து அமலாக்க இயக்குநரகம் புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்வைத்த வாதத்தில், ‘ஜெயினுக்கு திகாா் சிறையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இதனால் அவருக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது’ என்றும் வாதிடப்பட்டது. மேலும், அங்குஷ் ஜெயின் மற்றும் வைபவ் ஜெயின் ஆகியோருக்கு ஜாமீன் அளித்தால், அவா்கள் நீதியிலிருந்து தப்பித்துவிடலாம் அல்லது ஆதாரங்களை சிதைக்கலாம் என்றும் வாதிடப்பட்டது.