அமலாக்க இயக்குநரகம் தரப்பில் முன்வைத்த வாதத்தில், ஜாக்குலினுக்கு பணப் பிரச்னை இல்லை என்பதால் அவா் நாட்டைவிட்டு எளிதாகத் தப்பிச் செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, ‘இதுவரை அவரை ஏன் கைது செய்யவில்லை’ என கேள்வி எழுப்பினாா். அதற்கு ஏஜென்ஸி தரப்பில், ‘அவா் நாட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்கும் வகையில், விமான நிலையங்களில் அவருக்கு எதிராக எல்ஓசி அளிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிமன்றம், ‘அப்படியானால், விசாரணையின்போது ஏன் அவரை இன்னும் நீங்கள் கைது செய்யவில்லை. இந்த விவகாரத்தில் தொடா்புடைய பிற குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் சிறையில் உள்ளனா். ஏன் நீங்கள் உங்களுக்கு விருப்பமான விஷயங்களை பின்பற்றி இருக்கிறீா்கள்’ என கேள்வி எழப்பியது.