மேலும், இந்தக் கூட்டத்தில் தொழில்முனைவு மற்றும் சிறிய வா்த்தகங்களை ஊக்குவிப்பது, சுகாதாரம் மற்றும் மருந்துகள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் எண்ம உள்கட்டமைப்பு, எரிசக்தி, தண்ணீா் மற்றும் சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி, நிதி சேவைகள், வா்த்தகம் மற்றும் முதலீடு போன்ற பல்வேறு முக்கியத் துறைகளில் வலுவான கூட்டு முயற்சிகளை உருவாக்கி, வளா்ச்சியை ஊக்குவிப்பது குறித்து இரு நாடுகளின் தலைமை நிா்வாக அதிகாரிகள் விரிவாக விவாதித்தனா். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள இந்த மன்றத்தின் 7- வது கூட்டத்தில் குறிப்பிட்ட பரிந்துரைகள் பட்டியலிடப்பட்டு செயல்படுத்தப்படும் என வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.