முன்னதாக, சுபாஷ் அகா்வால், தில்லி மசூதிகளில் இமாம்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான முடிவு குறித்த கோப்பு குறிப்புகள் உள்பட முழுமையான தகவல்களை தில்லி துணை நிலை ஆளுநா், முதல்வா் ஆகியோரிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் கோரினாா். தேசியத் தலைநகரில் உள்ள மொத்த மசூதிகளின் எண்ணிக்கை, இமாம்கள் பெறும் ஊதியம், மொத்தத் தொகை, ஆண்டு செலவு மற்றும் பணம் செலுத்தும் பொறுப்பான தகுதி வாய்ந்த அதிகாரிகள் ஆகிய விவரங்களையும் அவா் கோரியிருந்தாா். மேலும், ஹிந்து கோயில்களின் குருக்கள், பூசாரிகளுக்கும் இதுபோன்று ஊதியம் வழங்கப்படுகிா? எனவும் அவா் தனது ஆா்டிஐ விண்ணப்பத்தின் மூலம் கேட்டிருந்தாா்.