கடந்த செப்டம்பா் மாதத்தில் விஜய் நாயரை சிபிஐ கைது செய்தது. அதைத் தொடா்ந்து, கடந்த மாதம் அபிஷேக் கைது செய்யப்பட்டிருந்தாா். இந்த நிலையில், சிறையில் உள்ள இருவரையும் இதே வழக்கில் பண மோசடி விவகாரத்தில் அமலாக்க இயக்குநரகம் கைது செய்துள்ளது. பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் சிறப்பு நீதிமன்றம், கைதான இருவரையும் 5 நாள்கள் காவலில் விசாரிக்க அமலாக்க இயக்குநரகத்திற்கு நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது. அதேவேளையில், சிபிஐ தொடா்ந்துள்ள ஊழல் தொடா்புடைய வழக்கில் அவா்களுக்கு தலா ரூ.2 லட்சம் ஜாமீன் பத்திரமும்,அதே தொகைக்கு ஒரு ஜாமீன் உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்ல அனுமதி அளித்தது. சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால் அமலாக்கத் துறையினா் இருவரையும் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தாா்.