வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

அபிராமி பட்டரின் பண்புவமை!

அபிராமி என்பதற்கு எப்போது பார்த்தாலும் எல்லோருடைய மனத்தையும் ஈர்ப்பவள் என்பது பொருளாகும்.

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 11:45 am

முனைவர் இரா. மாது

அபிராமி என்பதற்கு எப்போது பார்த்தாலும் எல்லோருடைய மனத்தையும் ஈர்ப்பவள் என்பது பொருளாகும். பேரழகியான அவளை சுந்தரி, லலிதா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாகயிருக்கிற அன்னையை ஒருமுறை பார்த்து விட்டால் அவளை மீண்டும் மீண்டும் பார்க்கச் செய்து விடுகிறாள் என்னும் காரணத்தால் திருக்கடவூரில் நின்று அருள்பாலிக்கிற அம்மையை அபிராமி என்று அழைக்கிறோம்.

அம்பிகை வழிபாட்டின் மேன்மை, அவளது திருநாமங்கள், உலகின் தாயாக விளங்குகிற அவளின் எளிவந்த தன்மை, அன்பராகி நிற்பவர்க்கு அருள்பாலிக்கும் கருணை ஆகியவற்றை விரிவாக விளக்குகிற நூலே அபிராமி பட்டர் இயற்றியருளிய அபிராமி அந்தாதி ஆகும். எழுத்தெண்ணிப் பாடவேண்டிய கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ள பாடல்களைக் கொண்டுள்ள அந்த நூலின் முதல் பாடல் கீழ்க்காணும் விதமாக அமைந்துள்ளது.

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்,

உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது,

மலர்க்கமலை

துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும

தோயமென்ன

விதிக்கின்ற மேனி அபிராமி, என்றன்

விழுத்துணையே

செம்மையான நிறத்திலே குளிர்ந்த ஒளியைத் தருகிற இளங்காலைச் சூரியன், 'கண்டவுடன் வணங்கத் தோன்றும் உச்சித் திலகம், மாணிக்கத்தில் சிவப்பு நிறத்தோடு எப்போதும் வீசுகின்ற ஒளி, மாதுளம்பூவில் சிவந்த நிறத்தோடு மென்மை, குங்குமப்பூக் குழம்புச் சிவப்பு நிறத்தோடு மணமும் குளுமையும் நிறைந்ததாகவும் விளங்குவதையொட்டி மேற்கூறிய யாவும் அன்னையின் மேனிக்கு உவமையாக்கப்பட்டிருக்கின்றன. மின்னல் மட்டுமே நிறமில்லாவிட்டாலும் அம்பிகையின் மேனிக்கு உவமையாகக் கூறப்பட்டிருக்கிறது.

அம்பிகை வழிபாட்டில் சிவப்பு வண்ணமே விசேஷமாய் கொண்டாடப்படுகிறது. செங்கதிர், உச்சித் திலகம், மாணிக்கம், மாதுளம்போது, குங்குமப் பூக் கலவை அனைத்தும் செம்மை நிறத்தன.

அபிராமி பட்டர் காணும் பொருள்களை அம்பிகையின் மேனிக்கு உவமையாக்கி மகிழ்ந்தாலும், அதைப் பண்போடு இணைத்துப் பண்புவமையாக்கி வியக்க வைக்கிறார்.

பண்புக்கு அடிப்படை வண்ணம், வடிவம், அளவு, சுவை என்பனவாம். செங்கதிர், உச்சித் திலகம் இரண்டும் சிவப்பென்னும் வண்ணப் பண்பைப் பெற்றுச் சிறந்து விளங்குகிறது.

மாணிக்கம் செம்மையோடு வடிவப் பண்பைப் பெற்று உயர்ந்து நிற்கிறது. மாதுளம்போது செய்ய நிறமும் மென்மையொடு சிறியதான அளவுப் பண்பை உடையதும் ஆகிறது. குங்குமப் பூக் கலவை சிவந்ததாயும் சுவையெனும் பண்பைப் பெற்றுள்ளதை அறிய முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.