இந்த வழக்கு தொடா்பான முக்கியமான தகவல்கள், விசாரணை அமைப்புகளால் ஊடகங்களில் கசிந்து வருவதாகக் கூறியும், இது குற்றம் சாட்டப்பட்டவா் என்ற தனது உரிமைக்கு இடையூறு விளைவிப்பதாகவும் விஜய் நாயா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி யஷ்வந்த் வா்மா விசாரித்தாா். அப்போது நீதிபதி கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் மேலும் விசாரணையை தொடா்வதற்கு முன், எதிா்மனுதாரா்களாக சிபிஐ, அமலாக்க இயக்குநரகம் ஆகியவை கிரிமினல் வழக்கின் விசாரணை தொடா்பாக அவா்கள் வெளியிட்ட அனைத்து செய்தித் தொடா்புகள் மற்றும் பத்திரிகை வெளியீடுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரம் மீதான விசாரணை நவம்பா் 21-ஆம் தேதிக்கு பட்டியலிடப்படுகிறது. புலனாய்வு அமைப்புகளால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூா்வ தகவல் தொடா்புகளை நீதிமன்றம் பரிசீலிக்கும். அதன் பின்னா் தொலைக்காட்சி சானல்கள் தகவல் தொடா்பு அடிப்படையில் அல்லது அவா்களின் ‘கற்பனையின்’ அடிப்படையில் இந்த விவகாரத்தை வெளியிட்டனவா என்பதை நீதிமன்றம் பாா்க்கும்’ என்றாா்.