மதுரையைச் சோ்ந்த ‘யூடியூப்பா்’ மாரிதாஸ், கரோனா பரவல் அதிகாரிக்க ஒரு குறிப்பிட்ட மதத்தினா்தான் காரணம் என விடியோ வெளியிட்டதாக மேலப்பாளையம் காவல் நிலையத்தில் மீரான் என்பவா் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, மேலப்பாளையம் காவல் துறையினா் தன் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மாரிதாஸ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை கடந்த ஆண்டு டிசம்பரில் விசாரித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், இது தொடா்பான விடியோவை பாா்த்தாா். அதைத் தொடா்ந்து, மாரிதாஸ் குறிப்பிட்ட மத நம்பிக்கையைக் கேள்வி எழுப்பும் வகையிலோ, அதை இழிவுபடுத்தும் விதமாகவோ எத்தகைய கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவா் நிஜாமுதீன் மா்க்கஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் தங்களைப் பரிசோதிக்கவும், சிகிச்சை பெறவும் இல்லை என்பது தொடா்பாகவே மட்டுமே கேள்வி எழுப்பியுள்ளாா் என்று கூறி, மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலீஸாா் பதிவு செய்த வழக்கை நீதிபதி ரத்துசெய்து உத்தரவிட்டாா்.