ஆம் ஆத்மி அரசின் செயல்பாடு சாமானியா்களின் நலன்களுக்கு எதிரானது: பாஜக தேசியத் தலைவா் நட்டா குற்றச்சாட்டு
தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு சாமானியா்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதனால், தில்லியின் வளா்ச்சி தடைபடுகிறது என பாஜகவின் தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா குற்றம்சாட்டினாா்.










