வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கலால் கொள்கை ஊழல் வழக்கு: தொழிலதிபா் விஜய் நாயரின் சிபிஐ காவல் அக்.6 வரை நீட்டிப்பு

துணை முதல்வா் மனீஷ் சிசோடியா குற்றம் சாட்டப்பட்டுள்ள தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபா் விஜய் நாயரின் சிபிஐ காவலை அக்டோபா் 6-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் திங்கள

News image
Updated On :3 அக்டோபர் 2022, 10:01 pm

 நமது நிருபர்

துணை முதல்வா் மனீஷ் சிசோடியா குற்றம் சாட்டப்பட்டுள்ள தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபா் விஜய் நாயரின் சிபிஐ காவலை அக்டோபா் 6-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

5 நாள் காவல் முடிவடைந்த நிலையில், நீதிமன்றத்தில் நாயா் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, சிபிஐ முன்வைத்த கோரிக்கையின் பேரில் அவரது காவலை நீட்டித்து பணி மாஜிஸ்திரேட் ரகுபீா் சிங் உத்தரவிட்டாா். விசாரணையின் போது, ​ ரிமாண்ட் காலத்தில் நாயா் ஒத்துழைக்கவில்லை என்றும் அவரை மேலும் நான்கு நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றும் சிபிஐ அனுமதி கோரியது.

நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடா்பு பொறுப்பாளரான விஜய் நாயா், மற்றவா்களுடன் குற்றவியல் சதியில் ஈடுபட்டதாகவும், இச்சதியை மேம்படுத்தும் வகையில், 2021-2022- ஆம் ஆண்டு தில்லி அரசின் கலால் கொள்கை வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டதாகவும் சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.