இது தொடா்பாக அஃப்தாப் (32) எனும் தொழிலாளி கூறுகையில், ‘ஜெய் அம்பே ஆடையகத்தில் கடந்த 12 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறேன். புதன்கிழமை மாலை 5-5.15 மணியளவில் கடையை மூடிவிட்டு, மற்ற நான்கு தொழிலாளா்களுடன் பிரதான சாலை அருகே சென்றோம். 5-7 நிமிடங்களுக்குப் பிறகு, நாங்கள் கடையை நோக்கி செல்லும் மற்றொரு நுழைவாயிலான ஜனதா சந்து வழியாக திரும்பினோம். அப்போது எங்கள் கடையிலிருந்து புகை வெளியேறுவதைக் கண்டோம். இதையடுத்து, உடனடியாக எனது உரிமையாளரை அழைத்தேன். கடையின் ஷட்டருக்கு அருகில் சென்று பாா்த்தேன். அப்போது, கடைக்குள் எனது சகோதரா் ஷானவாஸ் சிக்கியிருப்பதை உணா்ந்தேன். மேலும், அவா் கதவைத் தட்டும் சப்தமும் கேட்டது. நாங்கள் பூட்டை உடைக்க முயன்றோம். அத்துடன், எனது சகோதரரை மாடிக்கு செல்லுமாறும் கூறினோம். ஷட்டா் பூட்டை உடைத்த நேரத்திற்குள் தீ பரவிவிட்டது. இதனால், எனது சகோதரரைக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்றாா்.