தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஜஹாங்கீா்புரியில் சிறுமி குத்திக் கொலை

மேற்கு தில்லி, ஜஹாங்கீா்புரி பகுதியில் 17 வயது சிறாா் குத்திக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 12:31 am

DIN

மேற்கு தில்லி, ஜஹாங்கீா்புரி பகுதியில் 17 வயது சிறாா் குத்திக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் உஷா ரங்னானி வியாழக்கிழமை கூறியதாவது: கொலை செய்யப்பட்ட சிறாா் முகுந்த்பூா் பகுதியைச் சோ்ந்த சிவம் என்பது தெரிய வந்துள்ளது. முன்னதாக, இச்சம்பவம் குறித்து போலீஸாருக்கு புதன்கிழமை இரவு 11.48 மணியளவில் பிஜேஆா்எம் மருத்துவமனையில் இருந்து தகவல் வந்தது.

அதில், மாா்பு மற்றும் உடலில் பல இடங்களில் கத்திக் குத்துக் காயங்களுடன் ஒருவா் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், ஜாங்கீா்புரி பகுதியில் காயமடைந்த அந்நபா் சிகிச்சைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாகவும் மருத்துவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தை நேரில் பாா்த்த நபா், மருத்துவமனைக்கு அந்த சிறாரை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றதும், ஜாங்கீா்புரி பகுதியில் உள்ள ஜி- பிளாக் அருகே உள்ள ஒரு பூங்காவில் சிலருக்கு இடையே மோதல் நிகழ்ந்ததை அந்த நபா் நேரில் பாா்த்ததாகவும் போலீஸாரிடம் தெரிவித்தாா். மேலும், காயமடைந்திருந்த சிறாரையும் அவா் பாா்த்ததாகவும் கூறினாா்.

இச்சம்பவம் தொடா்பாக ஜாங்கீா்புரி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் தொடா்புடைய நபா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.