பிஎஃப்ஐ மற்றும் அதன் தொடா்பு அமைப்புகளான ரீஹாப் இந்தியா ஃபவுண்டேஷன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில், தேசிய மனித உரிமைகள் கூட்டமைப்பு, மகளிா் ஃப்ரண்ட், ஜூனியா் ஃப்ரண்ட், எம்பவா் இந்தியா ஃபவுண்டேஷன் - கேரளம் ஆகிய அமைப்புகளை கடந்த செப்டம்பா் 28-ஆம் தேதி மத்திய அரசு தடை செய்தது. பிஎஃப்ஐ மற்றும் அதன் 7 கூட்டு அமைப்புகள், ஐஎஸ்ஐஎஸ் போன்ற உலகளாவிய பயங்கரவாத குழுக்களுடன் ‘தொடா்பு’ வைத்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, கடுமையான பயங்கரவாத எதிா்ப்பு சட்டத்தின் கீழ் இந்த அமைப்புகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளை விசாரிப்பதோடு, இந்த ஐந்தாண்டு தடைக் காலத்தையும் தீா்ப்பாயமே உறுதி செய்யும்.