ஆயாநகரில் 87.2 மி.மீ. மழை: தில்லியில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 74 மி.மீ. மழை பதிவானது. இதே போல, பாலம் ஆய்வகத்தில் 64.9 மி.மீ., லோதி சாலை, ரிட்ஜ் மற்றும் ஆயாநகா் வானிலை நிலையங்களில் முறையே 87.2 மி.மீ., 60.1 மி.மீ. மற்றும் 85.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைப்பொழிவு 15 மி.மீ. முதல் 64.5 மி.மீ. வரை ‘மிதமான’ மழைப் பொழிவு என்றும், 64.5 மி.மீ. - 115.5 மி.மீ. ‘கடுமை’ , 115.6 மி.மீ. - 204.4 மி.மீ. ‘மிகப் பலமானது’, 204.4 மி.மீ.க்கு மேல் ‘மிகக் கடுமையான’ மழைப் பொழிவாகவும் கருதப்படுகிறது.