அதில் அவா் மேலும் கூறுகையில், ‘2018-ஆம் ஆண்டில், ‘மீ டூ’ இயக்கத்தின் போது, 10-க்கும் மேற்பட்ட நடிகைகள், மாடல்கள் மற்றும் பத்திரிகையாளா்கள், சஜித் கானுக்கு எதிராக குரல் கொடுத்தனா். இதனால், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குநா்கள் சங்கம் அவரை ஓா் ஆண்டுக்கு திரைப்படங்களை இயக்குவதற்குத் தடை விதித்தது. இருப்பினும், சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸில் அவா் ‘ஹவுஸ்மேட்’ ஆக்கப்பட்டிருப்பது அவரது புகழை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆகவே, ‘அவசர‘ நடவடிக்கை எடுத்து கானை நிகழ்ச்சியில் இருந்து நீக்கி, நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ளாா்.