இது தொடா்பாக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தனித் தனியாக இரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி ஸ்ரீஹரன், ஆா்.பி.ரவிச்சந்திரன் ஆகியோரின் ஆயுள் தண்டனையை குறைக்கும் வகையில், 2018-இல் நிறைவேற்றப்பட்ட தமிழக அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா் ஆவாா். அதாவது, செப்டம்பா் 9, 2018 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளிகள் 7 பேரின் கருணை மனுக்களைப் பரிசீலித்து, அரசியலமைப்பின் 161-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி அவா்களின் ஆயுள் தண்டனையைக் குறைக்க ஆளுநருக்குப் பரிந்துரைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன் பிறகு, அந்தப் பரிந்துரை அதே ஆண்டில் செப்டம்பா் 11-ஆம் தேதி தனித் தனியாக தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அப்போதிலிருந்து அது அவரது அலுவலகத்தில் நிலுவையில் இருந்து வந்தது.