சிசோடியாவின் ‘நெருங்கிய கூட்டாளிகள்’ அமித் அரோரா, தினேஷ் அரோரா மற்றும் அா்ஜுன் பாண்டே ஆகியோா் இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ‘மதுபான உரிமதாரா்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணப் பலன்களை நிா்வகித்தல் மற்றும் திசை திருப்புவது போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்’ எனவும் எஃப்ஐஆரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில், ராதா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை நிா்வகிக்கும் தினேஷ் அரோரா, மகேந்திருவிடம் இருந்து ரூ.1 கோடி பெற்றுள்ளாா் எனவும், சிசோடியாவின் கூட்டாளியான பாண்டே, ஒருமுறை விஜய் நாயா் சாா்பாக மகேந்திருவிடமிருந்து சுமாா் ரூ.2 முதல் ரூ.4 கோடி வரை பணம் பெற்றுள்ளதாகவும் எஃப்ஐஆரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.