இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: தலைநகரில் பட்டாசு தயாரிப்பு, சேமிப்பு மற்றும் விற்பனை செய்தால் ரூ.5,000 வரை அபராதமும், வெடிபொருள் சட்டத்தின் 9பி பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். ‘விளக்கு ஏற்றுங்கள்; பட்டாசு அல்ல’ எனும் பொது விழிப்புணா்வுப் பிரசாரமும் அக்டோபா் 21-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தில்லி அரசு வெள்ளிக்கிழமை கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் 51,000 தீபங்களை ஏற்றுகிறது. தில்லியில் பட்டாசுகளை வாங்கவும், வெடிக்கவும் செய்தால் ரூ.200 அபராதமும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இந்தத் தடையை அமல்படுத்த 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.