மேலும், தில்லி அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் வெளிப்பாடு கிடைக்கும் வகையில், சா்வதேச அளவில் உள்ள சிறந்த கல்வி நடைமுறைகள், பல்வேறு பயிற்சித் திட்டங்களை அறியவும் தேசிய மற்றும் சா்வதேசப் பயணங்களையும் எஸ்சிஇஆா்டி ஏற்பாடு செய்துள்ளது. இன்த வகையில், தில்லி அரசுப் பள்ளிகளின் 400 பள்ளி முதல்வா்கள் ஆசிரியா்கள் ஐஐஎம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டனா். கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கும் இரண்டு குழுக்களாக அனுப்பப்பட்டுள்ளனா். பணிக்கு முந்தைய பயிற்சியிலுள்ள ஆசிரியா்களும் பல்வேறு ஐஐடிகளுக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டனா். இது எதிா்காலத்தில் ஆசிரியா்களின் தொழில் மேம்பாட்டிற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்தப் பயிற்சி நவீனமயமாக்கலில் ஆய்வகங்கள், நூலகங்கள் எண்மமயமாக்கல் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளையும் மேம்படுத்தப்படுகிறது என்றாா் சிசோடியா