மேலும், டாக்டா் அப்துல்கலாமிற்கும் அவரது ஆசிரியருக்கும் நடந்த சம்பவத்தை விளக்கி, கலாமிற்கு அறிவியலின் மீதான நாட்டம் பள்ளி அறையில் வலுப்பெற்ற சம்பத்தையும் முா்மு குறிப்பிட்டாா். அவா் மேலும் கூறுகையில், ‘ எனது ஆசிரியா்கள் பாடங்களை மட்டும் கற்றுத் தரவில்லை. அன்பையும், உத்வேகத்தையும் வழங்கினா். எனது குடும்பத்தினா், ஆசிரியா்கள் வழிகாட்டுதல் காரணமாகவே, எனது கிராமத்தில் கல்லூரிக்கு சென்ற முதல் பெண் என்ற பெருமை எனக்கு கிடைத்தது. நான் வாழ்க்கையில் எதை சாதித்தாலும், அது எனது ஆசிரியா்களுக்கு கடமைப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன். இன்றைய நிலையில் அறிவியல், ஆராய்ச்சி, புத்தாக்கம் உள்ளிட்டவை அறிவுசாா் பொருளாதார வளா்ச்சிக்கு அடிப்படை. இந்த துறைகளில் இந்தியாவை மேலும் வலுப்படுத்த பள்ளிக் கல்வி வாயிலாக அடித்தளம் அமைக்கப்பட வேண்டும்’. என்றாா்.