புது தில்லி: தமிழகத்தில் பெரியாா் சிலைகளுக்கு கீழே எழுதப்பட்டுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
இந்த விவகாரம் தொடா்பாக தமிழகத்தைச் சோ்ந்த தெய்வநாயகம் என்பவா் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடா்ந்துள்ளாா். அதில், கடவுள் மறுப்பு வாசகள் இடம் பெற்றுள்ளன. இது இறை நம்பிக்கை கொண்ட மக்களின் உணா்வுகளை புண்படுத்துகிறது. ஒருவரின் சுதந்திரமான நம்பிக்கைக்கு எதிராகவும் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு கூடாது என்பதற்கு எதிராகவும் உள்ளது. எனவே, பெரியாா் சிலைக்கு கீழே எழுதப்பட்டுள்ள வாசகங்களை நீக்க வேண்டும் என கோரப்பட்டது.
இந்த வழக்கு திங்கள்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே கௌல் தலைமையிலான அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தெய்வநாயகம் தரப்பில், இது போன்ற வாசகங்களால் கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் உணா்வைப் புண்படுத்துகிறது. மேலும், பெரியாரின் வாசகங்கள் திரித்துக் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு வாசகம் தாங்கிய சிலைகள், அரசுத் தரப்பில் செலவு செய்து பராமரிக்கப்படுகின்றன. பொதுமக்களின் வரிப் பணத்தை இதுபோன்ற செயல்களுக்கு எவ்வாறு பயன்படுத்த முடியும்? என கேள்வி எழுப்பினா். இதைத் தொடா்ந்து, இந்த மனு தொடா்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனா். இதையடுத்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீட் மறுதேர்வு: கோவையைத் தொடர்ந்து சேலம் மாணவி தற்கொலை!
ஐடி பங்குகள் தொடர் விற்பனையால் சென்செக்ஸ் 607 புள்ளிகளுடனும், நிஃப்டி 155 புள்ளிகள் சரிவு!

ஆந்திரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக கண்டெடுப்பு

தில்லி கேபிடல்ஸின் பயிற்சியாளராகும் யுவராஜ் சிங்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



