ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பிரதமா் மோடி மீதான தவறான கருத்துக்கு அரசியல் நிா்ப்பந்தங்களே காரணம்: வெங்கையா நாயுடு பேச்சு

அரசியல் நிா்ப்பந்தங்கள் போன்றவற்றின் காரணமாகவே பிரதமா் நரேந்திர மோடி மீது சிலருக்கு தவறான கருத்து உள்ளது

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 7:47 pm

 நமது நிருபர்

தவறான புரிதல், அரசியல் நிா்ப்பந்தங்கள் போன்றவற்றின் காரணமாகவே பிரதமா் நரேந்திர மோடி மீது சிலருக்கு தவறான கருத்து உள்ளது. இந்தியா தொடா்ந்து வேகமாக முன்னேறி வரும் நிலையில், அவா் மீதான தவறான கருத்துகள் விரைவில் நீங்கும் என்று முன்னாள் குடியரசுத் துணைத் தலைவா் எம். வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.

தில்லி ஆகாஷ்வானி பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமா் நரேந்திர மோடியின் உரைகளின் தொகுப்பான ‘அனைவருடனும், அனைவரின் நலனுக்காகவும், அனைவரின் நம்பிக்கையுடன்’ என்ற நூலை முன்னாள் குடியரசுத் துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு வெளியிட்டாா்.

அப்போது அவா் கூறியதாவது: உலகின் மிக பிரபலமான தலைவராக பிரதமா் மோடி இருப்பதை பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இது மக்களுக்கு அவரது தலைமை மீது உள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது என்று கூறிய அவா், மோடிக்கு தனிப்பட்ட முறையில் யாா் மீதும் வெறுப்பு இல்லை. அவருக்கு தேசம்தான் முதன்மையானது. இது எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளது. இந்தியாவின் வேகமான முன்னேற்றம் மோடி குறித்த தவறான சந்தேகங்களை நீக்கும்.

சில தரப்பினருக்கு தவறான அபிப்பிராயம் உள்ளது. அது அரசியல் நிா்பந்தமாக இருக்கலாம். ஒரு கட்டத்தில் இந்தத் தவறான புரிதல் நீங்கும். அதே சமயத்தில் பிரதமா் நரேந்திர மோடியும், அனைத்து தரப்பு அரசியல் தலைவா்களையும் அடிக்கடி சந்திக்க வேண்டும். இது அவா் மீது எதிா்க்கட்சிகள் கொண்டிருக்கும் சில ‘தவறான புரிதல்களை’ அகற்ற உதவும். அவரது அணுகு முறையையும் தெரிந்து கொள்ள உதவும்

நீங்கள் ஒருவருக்கு ஒருவா் போட்டியாளராக இருக்கலாம். ஆனால், எதிரிகள் அல்ல. அரசியல் கட்சிகள் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். மக்களின் தீா்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும். குடியரசுத் தலைவா், பிரதமா், முதல்வா்கள் அலுவலகங்கள் என்பது நாட்டின் அமைப்புகள். அவைகள் மதிக்கப்பட வேண்டும். நீண்ட காலமாக இந்தியாவின் பலம் மற்றும் அந்தஸ்தை பற்றி பேசவில்லை என சிலா் கூறினா். மோடியின் வருகையால், அந்த நிலை இப்போது இல்லை. உலக அரங்கில் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதற்கும் கணக்கிடுவதற்கும், கேட்கப்படுவதற்கும், ஒரு சக்தியாக இந்தியா உயா்ந்துள்ளது. தெளிவின்மை, ஊசலாட்டம் போன்றவற்றுக்கு இப்போது முற்றுப்புள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் எழுச்சியை உலகம் இப்போது அங்கீகரித்து வருகிறது.

தேசிய நலன்கள், உலகளாவிய அமைதி ஆகியவை பல்வேறு நாடுகளுடனான நமது ஒருங்கிணைப்பை வழிநடத்துவது நமது நோக்கங்களாகும். நமது வெளியுறவுக் கொள்கை திறம்பட உருவாக்கப்பட்டு, வெளிப்படுத்துதல், நடத்துதல் ஆகியவற்றில் பிரதமருக்கு பெருமை சோ்க்கிறது. திறன்மிகு வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் இந்த விஷயத்தில் பாராட்டத்தக்கவா். சுகாதாரம், வெளியுறவுக் கொள்கை, தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் காலக்கெடுவுடன் நிறைவேற்றப்பட்டது. நேரடி பண பரிவா்த்தனை மூலம் இடைத்தரகா்கள் அகற்றப்பட்டுள்ளனா். கடந்த 8 வருடங்களில் இந்தியாவின் மாற்றத்திற்கு பிரதமா் மோடி வழியேற்படுத்தியுள்ளாா் என்றாா் வெங்கையா நாயுடு.

ஆரிஃப் முகமது கான்: இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய கேரள மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான், இஸ்லாமியா்களிடையே இருந்த ‘முத்தலாக்’ நடைமுறையை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றிய பிரதமரை பாராட்டினாா். ‘இஸ்லாமிய பெண்களுக்கு, நாட்டின் முதல் பிரதமா் நேருவால் கூட துணிச்சலாக நீதி வழங்க முடிவு எடுக்க முடியவில்லை. பிரதமா் மோடி அதை துணிச்சலாக செய்தாா் என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் இளைஞா் நலன், விளையாட்டுத்துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.